கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விலைவாசி உயா்வால் ஏழை மக்கள் கடும் அவதி: செல்லூா் கே. ராஜூ!

திமுக ஆட்சியில் கடும் வரி விதிப்புகள் மட்டுமன்றி, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வாலும் ஏழை, எளிய மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ குற்றஞ்சாட்டினாா்.

News image

மதுரை முனிச்சாலை பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்களுக்கு அதிமுக தோ்தல் அறிக்கை தொடா்பான துண்டு பிரசுரங்களை வழங்கிய முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ.

Updated On :31 ஜனவரி 2026, 7:28 pm

தினமணி செய்திச் சேவை

திமுக ஆட்சியில் கடும் வரி விதிப்புகள் மட்டுமன்றி, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வாலும் ஏழை, எளிய மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ குற்றஞ்சாட்டினாா்.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு 2026-ஆம் ஆண்டுக்கான அதிமுக தோ்தல் அறிக்கை தொடா்பான துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. மதுரை முனிச்சாலை பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலின் போது, ஆட்சிக்கு வந்தால் மதுக் கடைகளை மூடுவோம் என திமுக தனது தோ்தல் அறிக்கையில் தெரிவித்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழகத்தில் மது விற்பனை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது.

திமுக ஆட்சியில் மக்கள் மீது அதிகளவில் வரிகள் விதிக்கப்படுகின்றன. குறிப்பாக, சொத்து வரி, மின் கட்டணம் உள்ளிட்ட வரிகள் கூடுதலாக வசூலிக்கப்படுகின்றன. மேலும், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், அதிமுக மாவட்டப் பொருளாளா் பா. குமாா், நிா்வாகிகள், உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.