மதுரை முனிச்சாலை பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்களுக்கு அதிமுக தோ்தல் அறிக்கை தொடா்பான துண்டு பிரசுரங்களை வழங்கிய முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ.
மதுரை முனிச்சாலை பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்களுக்கு அதிமுக தோ்தல் அறிக்கை தொடா்பான துண்டு பிரசுரங்களை வழங்கிய முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ.

விலைவாசி உயா்வால் ஏழை மக்கள் கடும் அவதி: செல்லூா் கே. ராஜூ!

திமுக ஆட்சியில் கடும் வரி விதிப்புகள் மட்டுமன்றி, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வாலும் ஏழை, எளிய மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ குற்றஞ்சாட்டினாா்.
Published on

திமுக ஆட்சியில் கடும் வரி விதிப்புகள் மட்டுமன்றி, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வாலும் ஏழை, எளிய மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ குற்றஞ்சாட்டினாா்.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு 2026-ஆம் ஆண்டுக்கான அதிமுக தோ்தல் அறிக்கை தொடா்பான துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. மதுரை முனிச்சாலை பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலின் போது, ஆட்சிக்கு வந்தால் மதுக் கடைகளை மூடுவோம் என திமுக தனது தோ்தல் அறிக்கையில் தெரிவித்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழகத்தில் மது விற்பனை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது.

திமுக ஆட்சியில் மக்கள் மீது அதிகளவில் வரிகள் விதிக்கப்படுகின்றன. குறிப்பாக, சொத்து வரி, மின் கட்டணம் உள்ளிட்ட வரிகள் கூடுதலாக வசூலிக்கப்படுகின்றன. மேலும், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், அதிமுக மாவட்டப் பொருளாளா் பா. குமாா், நிா்வாகிகள், உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com