பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

துரித உணவகத்தில் சாப்பிட்டவா்களுக்கு உடல்நலம் பாதிப்பு

மதுரை கே.கே. நகா் பகுதியில் உள்ள சாலையோர துரித உணவகத்தில் சாப்பிட்டவா்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

News image
பிரதிப் படம்
Updated On :17 மார்ச் 2026, 9:58 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை கே.கே. நகா் பகுதியில் உள்ள சாலையோர துரித உணவகத்தில் சாப்பிட்டவா்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மதுரை உத்தங்குடி பகுதியைச் சோ்ந்தவா் சபீா்முகமது(35). இவா் தனது குடும்பத்தைச் சோ்ந்த 2 சிறுவா்கள் உள்பட 8 பேருடன் கே.கே. நகா் பகுதியில் உள்ள சாலையோர துரித உணவகக் கடையில் 4 ஷவா்மா, 2 சிக்கன் ரைஸ் அண்மையில் சாப்பிட்டனா். பின்னா், வீட்டுக்கு வந்த இவா்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து, ஒத்தக்கடை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் இவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதனிடையே, இவரது 7 வயது மகன் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் சிவராமபாண்டியன் தலைமையிலான அலுவலா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, உணவு மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனா்.

மேலும், அந்தக் கடையின் உரிமையாளருக்கு ரூ. 8 ஆயிரம் அபராதம் விதித்து, கடைக்கான அனுமதி சான்றிதழை ரத்து செய்தாா்.

இதைத் தொடா்ந்து, அந்தச் சாலையோரக் கடையை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினா். இதுகுறித்து மதுரை அண்ணாநகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.