பள்ளி மாணவர்களுக்கு இலவச தமிழ் அகராதி
ரெட்டியார்சத்திரம் அருகே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச தமிழ் அகராதி மற்றும் நோட்டுகளை முன்னாள் அமைச்சர் இ. பெரியசாமி வழங்கினார்.


ரெட்டியார்சத்திரம் அருகே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச தமிழ் அகராதி மற்றும் நோட்டுகளை முன்னாள் அமைச்சர் இ. பெரியசாமி வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், முருநெல்லிக்கோட்டை ஊராட்சி சுள்ளெறும்பு அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆத்தூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் இ. பெரியசாமியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ. 13.25 லட்சம் செலவில், நுழைவுவாயில் மற்றும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.
அதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சின்னு என்ற முருகன் தலைமை வகித்தார். ஒன்றிய அவைத் தலைவர் பழனிச்சாமி, நடுப்பட்டி ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், எம்.எல்.ஏ. இ. பெரியசாமி கலந்துகொண்டு, பள்ளியின் நுழைவுவாயில் மற்றும் சுற்றுச்சுவரை திறந்து வைத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச தமிழ் அகராதி மற்றும் நோட்டுகளை வழங்கிப் பேசினார்.
நிகழ்ச்சியில், ரெட்டியார்சத்திரம் முன்னாள் ஒன்றியத் தலைவர் கு. சத்தியமூர்த்தி, ரெட்டியார்சத்திரம் ஒன்றிய திமுக செயலர் ப. சிவகுருசாமி, வேடசந்தூர் முன்னாள் ஒன்றியத் தலைவர் பிரியம் நடராஜன், கவிதா பார்த்தீபன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...