விவசாயி மீது தாக்குதல்: 2 பேருக்கு வலை
கொடைக்கானலில் புதன்கிழமை முன் விரோதம் காரணமாக தாக்கப்பட்டதில் விவசாயி பலத்த காயமடைந்தார். இதுதொடர்பாக 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.


கொடைக்கானலில் புதன்கிழமை முன் விரோதம் காரணமாக தாக்கப்பட்டதில் விவசாயி பலத்த காயமடைந்தார். இதுதொடர்பாக 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மன்னவனூரைச் சேர்ந்தவர் அறிவழகன். விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமியும், அறிவழகனின் மனைவியும் பழகி வந்தனராம். இதை அறிவழகன் கண்டித்துள்ளார். இந்நிலையில் அறிவழகனை, ராமசாமியும், இவரது நண்பர் தவமுருகனும் சேர்ந்து கம்பால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அறிவழகன் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அறிவழகன் கொடைக்கானல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...