ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மாற்றுத்திறனாளிகளுக்கு 14 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான சிறப்பு மருத்துவ முகாம் 14 இடங்களில் நடைபெறுகிறது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 2:17 am

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான சிறப்பு மருத்துவ முகாம் 14 இடங்களில் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரசின் பல்வேறு துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடையும் வகையில், மாவட்டத்தில்  உள்ள 13  ஊராட்சி ஒன்றியங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
 முகாம்களில் கலந்து கொள்ளும் பயனாளிகளுக்கு இலவச தேசிய அடையாள அட்டை, இலவச உதவி உபகரணங்கள் (மூன்று சக்கர வண்டி சக்கர நாற்காலி, காதொலிக் கருவி, பிரெயில் கடிகாரம், கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, வங்கிக் கடன் உதவி, பராமரிப்பு உதவித் தொகை, இலவச பேருந்து பயணச் சலுகை போன்ற உதவிகள் வழங்கப்பட உள்ளன.
  அதன்படி வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை (அக். 13) நடைபெறும் முகாமில் வேடசந்தூர்  ஒன்றியத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம். குஜிலியம்பாறை ஒன்றியத்திற்கு,  குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் அக். 20ஆம் தேதியும், வடமதுரை ஒன்றியத்திற்கு, வடமதுரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அக். 24ஆம் தேதியும், நிலக்கோட்டை ஒன்றியத்திற்கு, நிலக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அக்.25ஆம் தேதியும்,  வத்தலகுண்டு ஒன்றியத்திற்கு, வத்தலகுண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அக்.26 ஆம் தேதியும், ஆத்தூர் ஒன்றியத்திற்கு, சின்னாளப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் அக்.31ஆம் தேதியும், நத்தம் ஒன்றியத்திற்கு, நத்தம் டி.கே.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நவ.1ஆம் தேதியும்,  சாணார்பட்டி ஒன்றியத்திற்கு, சாணார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நவ.2 ஆம் தேதியும், தொப்பம்பட்டி ஒன்றியத்திற்கு, தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நவ. 7ஆம் தேதியும், ஒட்டன்சத்திரம் ஒன்றியத்திற்கு,  ஒட்டன்சத்திரம் கே.ஆர். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நவ.8ஆம் தேதியும், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு, கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நவ.9ஆம் தேதியும், பழனி ஒன்றியத்திற்கு, பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நவ.14ஆம் தேதியும், கொடைக்கானல் ஒன்றியத்திற்கு,  கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நவ.15ஆம் தேதியும், கே.சி.பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நவ.16 ஆம் தேதியும் முகாம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.