முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கொடைக்கானலில் சுழற்சங்கம் சார்பில் விருது வழங்கல்

கொடைக்கானலில் சிறந்த சேவை செய்தவர்களுக்கு சுழற்சங்கம் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை ஏரிச்சாலையிலுள்ள உணவகத்தில் நடைபெற்றது.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:40 am IST

கொடைக்கானலில் சிறந்த சேவை செய்தவர்களுக்கு சுழற்சங்கம் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை ஏரிச்சாலையிலுள்ள உணவகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சுழற்சங்கத் தலைவர் ரோகன் சாம்பாபு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சுழற்சங்க ஆளுநர் கோபாலகிருஷ்ணன், கொடைக்கானல் பகுதியில் வனவிலங்குகள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த பெரா ஜான், கோடை சுத்தம் சமூக ஆர்வலர் அப்பாஸ், இளைஞர்களை விளையாட்டில் ஊக்குவித்து வரும் காவல்துறையைச் சேர்ந்த ஜான் ஆகிய 3 பேருக்கு விருதுகளை வழங்கிப் பேசினார். இதில் ரோட்டரி இன்ட்ராடிக் கிளப்பைச் சேர்ந்த பவான்ஸ் காந்தி வித்யாஸ்ரம் பள்ளி மாணவர்கள் சார்பில் ரூ.30 ஆயிரத்துக்கான காசோலை தமிழ்வழிக் கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிக்கு கழிப்பறை கட்டுவதற்கு நிதியாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுழற்சங்க முன்னாள் ஆளுநர் சாம்பாபு, சுழற்சங்கத்தைச் சேர்ந்த ஆசாத், சுகுமார்,  ராமன் ராஜ்குமார், தனசேகர், ராபின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.