இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

திண்டுக்கல்லில் முறைசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆறாயிரத்து ஐநூறு பேருக்கு நிலுவையில் உள்ள உதவித் தொகையினை உடனடியாக வழங்கக் கோரி முறைசாரா தொழிலாளர்கள்

Updated On :5 ஏப்ரல் 2018, 9:40 am IST

ஆறாயிரத்து ஐநூறு பேருக்கு நிலுவையில் உள்ள உதவித் தொகையினை உடனடியாக வழங்கக் கோரி முறைசாரா தொழிலாளர்கள் (சிஐடியு) சார்பில் திண்டுக்கல் நேருஜி நகரில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்தின் முன் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு, சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முத்துராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கே.பிரபாகரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, அனைத்து வகையான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் விபத்து எங்கு நடந்து இறந்தாலும் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஓய்வூதிய தொகையை ரூ.4 ஆயிரமாக உயர்த்த வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மகப்பேறு உதவித் தொகையை விரைவாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
 தொழிலாளர் நல வாரிய சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர் ஸ்ரீதரை சந்தித்து, கோரிக்கை மனுவினை அளித்தனர். அப்போது சிஐடியு மாநில துணைத் தலைவர் கே.ஆர்.கணேசன், 1500 தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஓய்வூதியம், 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கான மகப்பேறு உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அதேபோல் கல்வி உதவித் தொகையும் 4500 பேருக்கு கிடைக்கவில்லை எனக் கூறினார். அதற்கு பதில் அளித்த ஆய்வாளர் ஸ்ரீதர், நான் பதவி ஏற்றது முதல் அனைவருக்கும் காலதாதமின்றி உதவித் தொகை அளித்து வருகிறேன். அதற்கு முன்பு நிலுவையில் இருந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றார். ஆனால், அந்த மனுக்களை ஆய்வு செய்து தகுதியிருந்தால் உதவித் தொகை வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
பழனி: பழனியில் இந்திய தொழிற்சங்கத்தினர் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 பழனி வையாபுரி கண்மாய் புறவழிச்சாலை ரவுண்டானா முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்ட பொருளாளர் மனோகரன் தலைமை வகித்தார். அப்போது, அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கும் விபத்து மரண நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். இயற்கை மரண நிவாரணமாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். பெண்களுக்கு மகப்பேறு தொகையான ரூ.18 ஆயிரத்தை ஒரே தவணையில் வழங்க வேண்டும். மாத ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரத்தை நிலுவை தொகையுடன் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர்கள் பிச்சைமுத்து, மோகனா, ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.