கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை கார்-மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் (23). இவரும், இவரது நண்பர்கள் ராம் (18), ஆனந்த் (21), கோகுல் உள்ளிட்ட 6 பேர் மோட்டார் சைக்கிள்களில் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். கொடைக்கானலை சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச் சாலையான மச்சூர் பகுதியில் மதுரையிலிருந்து கொடைக்கானலுக்கு வந்த கார் மீது ஒன்றன் பின் ஒன்றாக இவர்கள் ஓட்டி வந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மோதின. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ராகுல், ராம், ஆனந்த் ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் கொடைக்கானல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ராகுல் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். ராம், ஆனந்த் ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கோகுல் தாண்டிக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து கார் ஓட்டுநர் சுப்பிரமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

