திண்டுக்கல் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்புச் செயலாளர் பி.குமாரசாமி தலைமை வகித்தார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கே.பி.நல்லசாமி முன்னிலை வகித்தார். கட்சியில் புதிய உறுப்பினர்களை அதிக அளவு சேர்ப்பது குறித்தும், ஒட்டன்சத்திரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் துணைப்பொதுச்செயலர் டிடிவி தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தில் வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







