
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் கூட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் தொடர்பான சிறப்பு குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (ஆக. 18) நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் தொடர்பான சிறப்பு குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (ஆக. 18) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திண்டுக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (ஆக.18) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கோவிலூர் (திண்டுக்கல் கிழக்கு), முத்தனம்பட்டி (திண்டுக்கல் மேற்கு), வேளாங்கண்ணிபுரம் (ஆத்தூர்), எத்திலோடு (நிலக்கோட்டை), குடகிப்பட்டி (நத்தம்), இடையக்கோட்டை(ஒட்டன்சத்திரம்), கோம்பைபட்டி (பழனி), கும்பரையூர் (கொடைக்கானல்), வேல்வார்கோட்டை (வேடசந்தூர்) ஆகிய கிராமங்களில் நடைபெறும் கூட்டங்களில் அந்தந்த பகுதி பொதுமக்கள் பங்கேற்று, பொது விநியோகத் திட்டம் தொடர்பான தங்களது குறைகளை மனுவாக அளித்து தீர்வு காணலாம் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




