கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

ஒட்டன்சத்திரத்தில் எம்ஜிஆர் நினைவு தினம்

ஒட்டன்சத்திரத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 31 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Updated On :25 டிசம்பர் 2018, 7:28 am IST

ஒட்டன்சத்திரத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 31 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
    இதையொட்டி, ஒட்டன்சத்திரம் ஒன்றிய அதிமுக சார்பில், பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
     இந்நிகழ்ச்சிக்கு, அதிமுக ஒன்றியச் செயலர் பி. பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. குப்புச்சாமி, நகரச் செயலர் உதயம் ராமசாமி, தேவி குணசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஏராளமான அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.
     இதேபோல், திண்டுக்கல் மேற்கு மாவட்ட அமமுக சார்பில், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலைய மேற்கு பகுதியில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஒட்டன்சத்திரம் அமமுக நகரச் செயலர் தங்கதுரை, ஒன்றியச் செயலர்கள் சந்திரன், சண்முகவேல், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலர் ஜமாலுதீன் உள்பட அக்கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.