நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வத்தலகுண்டு புனித தோமையார் ஆலய திருவிழா நிறைவு

வத்தலகுண்டு புனித தோமையார் ஆலயத்தில் திருவிழா ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுற்றது. 

Updated On :9 ஜூலை 2018, 1:39 am

வத்தலகுண்டு புனித தோமையார் ஆலயத்தில் திருவிழா ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுற்றது. 
       திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு புனித தோமையார் ஆலய பெருவிழா கடந்த ஜூன் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 9 நாள்கள் நடைபெற்ற இத் திருவிழாக்கு, வட்டாரப் பங்குத்தந்தை சேவியர் தலைமை வகித்தார். அருட்தந்தை ரெக்ஸ் பீட்டர், உதவி பங்குத் தந்தை பிரபு ஆகியோர் முன்னிலையில் சிறப்புத் திருப்பலி, ஆராதனை, வழிபாடு நடைபெற்று வந்தது. 8 ஆம் நாளான சனிக்கிழமை சிறப்பு திருப்பலியைத் தொடர்ந்து, புனித தோமையார் உருவச்சிலை மின் அலங்காரத் தேரில் பவனியாக கொண்டு வரப்பட்டது.
     வத்தலகுண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்ற இத்தேர் பவனியில், திருச்சிலுவை சகோதரிகள், அமலவை சகோதரிகள், பங்கு பேரவை நிர்வாகிகள், கல்லறைக் குழுவினர், வத்தலகுண்டு மேலக் கோவில்பட்டி, சின்னுப்பட்டி, மரியாயிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். அப்போது, உலக நன்மை வேண்டி ஜெபம் மற்றும் மன்றாடுதல் நிகழ்த்தப்பட்டது.
    தொடர்ந்து, 9ஆவது நாள் திருப்பலி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டு, திருக்கொடி இறக்கப்பட்டு இத் திருவிழா நிறைவுற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.