பாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

பழனியில் வியாபாரி வீட்டில் 1 கிலோ வெள்ளி திருட்டு

பழனியில் மளிகை கடைக்காரர் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகை, 1 கிலோ வெள்ளி பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

Updated On :24 ஜூலை 2018, 12:59 am IST

பழனியில் மளிகை கடைக்காரர் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகை, 1 கிலோ வெள்ளி பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
பழனி திருநகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன். பழனி காந்தி சந்தையில் மளிகைக் கடை வைத்துள்ளார். இவர் சனிக்கிழமை தனது மனைவியுடன் கோவையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.  இந்நிலையில் திங்கள்கிழமை காலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டினுள் இருந்த பீரோவை உடைத்து,  3 பவுன் தங்க நகை, 1 கிலோ வெள்ளி, ரூ.30ஆயிரம்  மற்றும் இருசக்கர வாகனம்  ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பழனி நகர் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கைரேகை நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தீவிர சோதனை மேற்கொண்டனர். பழனி பகுதியில் சமீப காலமாக திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் போலீஸார் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தி பாதுகாப்பு அளிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.