பழனியில் வட்டார வேளாண்மைப்பொறியியல் பணிக்கூட்டுறவு மையத்தில் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் அதிமுகவினர் மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டதால் வியாழக்கிழமை திமுகவினர் பூட்டுப் போட்டு போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கூட்டுறவு சங்க தேர்தலை முன்னிட்டு பல்வேறு கூட்டுறவு சங்கங்களிலும் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.
அதிமுக, அமமுக, திமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏராளமானோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிமுகவினர் மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டதாக பட்டியல் ஒட்டப்பட்டது. இதையடுத்து துணைப்பதிவாளர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
முறையாக பரிசீலனை செய்து சரியான பட்டியல் ஒட்டுவதாக தெரிவித்த நிலையில் இன்றும் அதிமுகவினரின் பெயர்கள் மட்டுமே ஒட்டப்பட்டது. இதையடுத்து புதன்கிழமை பழனி- திண்டுக்கல் சாலையில் உள்ள பழனி வட்டார வேளாண்மைப்பொறியியல் பணிக்கூட்டுறவு மையத்தை திமுக ஒன்றிய செயலாளர் பாண்டி தலைமையில் முற்றுகையிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட திமுகவினர் ஆளும் கட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி மையத்தின் அலுவலகத்திற்கு தாங்கள் கொண்டு வந்த பூட்டை போட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் போராட்டம் நடத்திய திமுகவினரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தோ்தல் கண்காணிப்புக் குழுக்கள் சோதனையில் ரூ.93.35 லட்சம் பறிமுதல்

வாக்கு எண்ணும் மையம்: ஆட்சியா் ஆய்வு

வாக்குச் சாவடிகளில் அடிப்படை வசதிகள்

சாலையில் தீப்பற்றி எரிந்த காா்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

