மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

திண்டுக்கல்லில் 2 பெண்கள் கொலை: உறவினர்கள் உள்பட 4 பேர் கைது

திண்டுக்கல்லில் வீட்டுக்குள் புகுந்து 2 பெண்கள் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், உறவினர்கள் உள்பட 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :14 மே 2018, 7:35 pm

DIN

திண்டுக்கல்லில் வீட்டுக்குள் புகுந்து 2 பெண்கள் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், உறவினர்கள் உள்பட 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
திண்டுக்கல் பேகம்பூர் யூசுப்பியா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாகுல்ஹமீது (50). இவரது மனைவி கொல்சம் பீவி (45). இவர்களது மகன் ஷேக் பரீத்தின் மனைவி மதினா பேகம், கடந்த சில நாள்களுக்கு முன் உடல் நலக் குறைவால் இறந்துவிட்டதையடுத்து, அவரை சாகுல்ஹமீது குடும்பத்தினர் சரியான முறையில் கவனிக்கவில்லை என்று அவரது உறவினர்கள் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதற்கிடையே, ஷேக் பரீத்துக்கு மறுமணத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மதினா பேகத்தின் சகோதரர்கள் மேலும் ஆத்திரமடைந்துள்ளனர்.
இந்நிலையில், யூசுப்பியா நகர் வீட்டிலிருந்த சாகுல் ஹமீது, கொல்சம் பீவி, அவரது தங்கை பர்கத் நிஷா (40) ஆகியோரை 4 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்திவிட்டு ஞாயிற்றுக்கிழமை தப்பியோடிவிட்டது.
இதில், கொல்சம் பீவி, பர்கத் நிஷா ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இக்கொலை தொடர்பாக, பேகம்பூரைச் சேர்ந்த மதினா பேகத்தின் சகோதரர்கள் இஸ்மாயில், சதாமுசேன் உள்பட 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.