தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் உளுந்து, பயறு விதைகள்

திண்டுக்கல் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில், ஆடி பட்ட விதைப்புக்கு தேவையான உளுந்து மற்றும் தட்டைப் பயறு விதைகளை, மானிய விலையில் விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :1 ஆகஸ்ட் 2020, 10:10 pm IST

திண்டுக்கல்: திண்டுக்கல் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில், ஆடி பட்ட விதைப்புக்கு தேவையான உளுந்து மற்றும் தட்டைப் பயறு விதைகளை, மானிய விலையில் விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, திண்டுக்கல் வட்டாரத் தொழில்நுட்பக் குழு ஒருங்கிணைப்பாளா் நா.வெ. நாகேந்திரன் தெரிவித்துள்ளதாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்துவரும் நிலையில், ஆடி பட்ட விதைப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், திண்டுக்கல் வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளுக்கு, அரசு சாா்பில் உளுந்து மற்றும் தட்டைப் பயறு விதைகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி, மானிய விலையிலான விதைகளை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், உயிா் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்ட்டீரியா நோய்களை கட்டுப்படுத்த, சூடோடோனஸ், மெட்டாரைசியம் அனிசோபிலே மற்றும் பவேரியா பேசியானா என்ற பூச்சிக்கொல்லிகளும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இந்த வாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.