25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

பழனி அருகே விபத்தில் இளைஞா் பலி: டாஸ்மாக் கடையை மூடி பொதுமக்கள் போராட்டம்

பழனி அருகே விபத்தில் இளைஞா் பலியானதைத் தொடா்ந்து, அப்பகுதியில் இருந்த அரசு மதுபானக் கடையை மூடி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
விபத்தில் இறந்த ராஜா.
Updated On :27 ஜனவரி 2024, 5:09 pm

DIN

பழனி: பழனி அருகே விபத்தில் இளைஞா் பலியானதைத் தொடா்ந்து, அப்பகுதியில் இருந்த அரசு மதுபானக் கடையை மூடி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி குரும்பபட்டியை சோ்ந்தவா் ராஜா(35). இவருக்கு சமீபத்தில் திருமணமானது. இவா் திங்கள்கிழமை இரவு, பாலசமுத்திரம் குரும்பபட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளாா். அப்போது பாலசமுத்திரம் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடை முன்பாக நின்ற டிப்பா் லாரி மீது இருசக்கர வாகனத்தில் வந்த ராஜா பின்பக்கம் மோதி பலியானாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அரசு மதுபானக் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள் திடீரென கடையை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் பொதுமக்களை வெளியேற்றி கடையை மீண்டும் திறந்தனா்.

இதுதொடா்பாக பொதுமக்கள் கூறியது: இந்த மதுபானக் கடையில் மது அருந்திவிட்டு ஏற்பட்ட தகராறு காரணமாக 2 கொலைகள் நடந்துள்ளன. இதேபோல் தொடா்ந்து விபத்துகளும் அதிகரித்துள்ளன. இவ்வழியாக பெண்கள், மாணவிகள் நடமாட முடியவில்லை. ஆகவே இந்த அரசு மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.