கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

குடிநீர் இணைப்பு வழங்க வசூல்: நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக மனு

திண்டுக்கலில்  வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை பயன்படுத்தி முறைகேடாக பண வசூலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி  பாஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

News image
மனு அளிக்க வந்த பாஜகவினர்
Updated On :27 ஜனவரி 2024, 5:13 pm

DIN

திண்டுக்கலில்  வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை பயன்படுத்தி முறைகேடாக பண வசூலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி  பாஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது தொடர்பாக பாஜக நிர்வாகிகள் கூறியதாவது, “கிராமப்புற மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஜல் சக்தி திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தின் ஆய்வுப் பணிகளுக்காக தமிழகத்திற்கு ரூ.640 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் புதிய இணைப்பு பெற்றுத் தருவதாக கூறி ரூ.30ஆயிரம் வரை வசூலிக்கின்றனர். இதுதொடர்பாக ஊரக வளர்ச்சி மேம்பாட்டு முகமையின் திட்ட இயக்குநரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

பொதுமக்கள் நலன் கருதி, முறைகேடாக பண வசூலில் ஈடுபடுவோர் மீதும், அவர்களை கண்டிக்காத அதிகாரிகள் மீதும் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.