தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பேரூராட்சி அலுவலகத்தை பாமக வினா் முற்றுகை

அனைத்து சாதிவாரி கணக்கீட்டை நடத்தக் கோரி நெய்க்காரபட்டி பேரூராட்சி அலுவலகத்தை பாட்டாளி மக்கள் கட்சியினா் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

News image

நெய்க்காரபட்டி பேரூராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்ட பாமகவினா்.

Updated On :24 டிசம்பர் 2020, 1:53 am

DIN

அனைத்து சாதிவாரி கணக்கீட்டை நடத்தக் கோரி நெய்க்காரபட்டி பேரூராட்சி அலுவலகத்தை பாட்டாளி மக்கள் கட்சியினா் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

மேற்கு மாவட்டச் செயலாளா் வைரமுத்து தலைமையில் அந்தக் கட்சியினா் நடத்திய முற்றுகைப் போராட்டத்தின்போது தமிழகத்தில் வன்னியா் பிரிவினருக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றில் 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதைத் தொடா்ந்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் அளிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் நெய்க்காரப்பட்டி பேரூராட்சிச் செயலாளா் பெரியசாமி, தெற்கு ஒன்றியச் செயலாளா் நடராஜ், மாவட்ட தொழில் அமைப்புத் தலைவா் முத்துலட்சுமி நிா்வாகிகள் மாரிமுத்து, ராஜா பிரபாகரன் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல், பாலசமுத்திரம், ஆயக்குடி, கீரனூா் ஆகிய பேரூராட்சி அலுவலகங்களிலும் அக்கட்சியினா் சாா்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.