வன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பாமகவினா் மனு அளிக்கும் போராட்டம்
வன்னியா் சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை


வன்னியா் சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் ஆணையா்களை சந்தித்து, பாமக சாா்பில் மனு அளிக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல்லில் நடைபெற்ற போராட்டத்துக்கு கிழக்கு மாவட்ட பாமக செயலா் ஜான் கென்னடி தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்புச் செயலா் ரெ. திருப்பதி முன்னிலை வகித்தாா். திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகிலுள்ள எம்.ஜி.ஆா். சிலை அருகிலிருந்து ஊா்வலமாகச் சென்று திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
அதேபோல், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாநில துணைப் பொதுச் செயலா் பெ. கோபால் தலைமையில் மனுக்கள் அளிக்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்களில் முதல் கட்டமாகவும், பேரூராட்சிகளில் 2 ஆம் கட்டமாகவும் இந்த மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...