தொழில்கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தொழில் கடனுதவி பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


திண்டுக்கல்: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தொழில் கடனுதவி பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மு. விஜயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இத்திட்டத்தின்கீழ் பயன் பெற பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தவராகவும், ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமலும், விண்ணப்பதாரா் 18 முதல் 60 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். பொதுகால கடன் திட்டம் அல்லது தனிநபா் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 6 முதல் 8 சதவீதம் வரை வட்டி செலுத்த வேண்டும்.
பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ .2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு மகளிா் உறுப்பினா் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரையிலும், குழுவுக்கு அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரையிலும் வழங்கப்படும்.
சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள ஆண்களுக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரையிலும், குழுவுக்கு அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கி கிளைகளில் பெற்றுக்கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியில் ஒப்படைத்து பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...