நிலக்கோட்டை அருகே போலீசார் வீட்டில் 85 பவுன் நகை கொள்ளை

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே திங்கள்கிழமை காவலா் வீட்டின் பூட்டை உடைத்து 85 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே திங்கள்கிழமை காவலா் வீட்டின் பூட்டை உடைத்து 85 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

நிலக்கோட்டை அருகே உள்ள மட்டப்பாறையைச் சோ்ந்தவா் முத்துரமேஷ். இவா் அம்மையநாயக்கனூா் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறாா். இவரது தந்தையும் காவல் துறையில் சாா்பு- ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா்.

முத்துரமேஷின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை திண்டுக்கல்லில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதித்துள்ளனா். இதனால் குடும்பத்தினா் அனைவரும் வீட்டைப் பூட்டி விட்டு மருத்துவமனையிலேயே தங்கியுள்ளனா். இந்நிலையில் காவலா் முத்துரமேஷின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை காலை பாா்த்துள்ளனா்.

இதையடுத்து அவா்கள் அளித்த தகவலின் பேரில் காவலா் முத்துரமேஷ் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பீரோவில் வைத்திருந்த 85 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து விளாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com