இதுதொடர்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்ட மதுரை நகர குற்றப் புலானாய்வு குற்றப்பி பிரிவு காவல்துறையினர், அதுதொடர்பான அறிக்கையை திண்டுக்கல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அதில், சார்பு ஆய்வாளர் திருமலை முத்துசாமி, தலைமைக் காவலர் ரவிச்சந்திரன், முதல்நிலை காவலர் பொன்ராம், அப்துல்வஹாப் (அப்போது மருத்துவ விடுப்பில் இருந்தவர், பின்னர் இறந்துவிட்டார்) ஆகியோர் தாக்கியதில் தான் செந்தில்குமார் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கோயில் திருவிழாவில் தகராறு செய்தவர் மீது, பணம் பறிப்பில் ஈடுபட்டதாக பொய்யான குற்றச்சாட்டை காவல்துறையினர் பதிவு செய்ததும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.