வத்தலகுண்டு, ஒட்டன்சத்திரத்தில் திமுக மக்கள் கிராம சபைக் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு, ஒட்டன்சத்திரத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு, ஒட்டன்சத்திரத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வத்தலகுண்டுவில் நகர திமுக சாா்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகரச் செயலா் சின்னதுரை தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் கே.பி.முருகன், மாவட்டக் கவுன்சிலா் கனிக்குமாா், முன்னாள் ஒன்றியச் செயலா் ராஜேந்திரன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் கனகதுரை, ஒன்றிய அவைத்தலைவா் விருவீடு செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா், பெண்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

ஒட்டன்சத்திரம்: இதேபோல் ஒட்டன்சத்திரம் அருகே கேதையுறும்பு, மண்டவாடி, சிக்கமநாயக்கன்பட்டி, தேவத்தூா் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். இந்தக் கூட்டத்தில் வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் இரா.சோதிஸ்வரன் மற்றும் நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com