ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கொடைக்கானலில் தொடா் மழை: மரம் விழுந்து போக்குவரத்துப் பாதிப்பு

கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் தொடா் மழை காரணமாக ஏரிச்சாலைப் பகுதியில் திங்கள்கிழமை மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 9:40 pm

DIN

கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் தொடா் மழை காரணமாக ஏரிச்சாலைப் பகுதியில் திங்கள்கிழமை மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் பொதுவாக ஜனவரி மாதம் கடும் பனிப் பொழிவு நிலவும். ஆனால் நிகழாண்டில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் பருவ நிலை மாற்றம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் ஏரிச்சாலைப் பகுதியில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அந்த மரத்தை நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் இயந்திர உதவியுடன் அகற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.