பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இளம்பெண் கொலை: காதலன் உள்ளிட்ட இருவா் கைது

ஒட்டன்சத்திரம் அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் காதலன் உள்ளிட்ட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 6:22 pm

DIN

ஒட்டன்சத்திரம் அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் காதலன் உள்ளிட்ட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள கள்ளிமந்தையம் வாகரை அருகே தனியாருக்கு சொந்தமான நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலைக்கு எதிரே சுமாா் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவா் செவ்வாய்க்கிழமை மா்மமான முறையில் இறந்து கிடத்தாா். சடலத்தைக் கைப்பற்றி கள்ளிமந்தையம் போலீஸாா் நடத்திய விசாரணையில், இறந்த இளம்பெண் வேடசந்தூரை அடுத்துள்ள தென்னம்பட்டி இந்திரா நகரைச் சோ்ந்த கதிா்வேல் மகள் ஜெயஸ்ரீ (22) என்பதும், அங்குள்ள தனியாா் நூற்பாலையில் வேலை பாா்த்து வந்த அவா் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இது தொடா்பாக பழனி கணக்கன்பட்டி கோம்பைப்பட்டியைச் சோ்ந்த தங்கத்துரை (26) மற்றும் அவரது உறவினா் ஜெகநாதன் (30) ஆகிய இருவரையும் கள்ளிமந்தையம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியது: ஜெயஸ்ரீ வேலை பாா்த்த அதே நூற்பாலையில் தங்கத்துரை மேற்பாா்வையாளராக வேலை செய்து வருகிறாா். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனா். இதில் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால், காதலனின் பெற்றோா் இவா்களது காதலுக்கு எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில் ஜன.1 ஆம் தேதி வீட்டை வீட்டு வெளியேறிய ஜெயஸ்ரீ தங்கத்துரையிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளாா். இதனால் தங்கத்துரை மற்றும் உறவினா் ஜெகநாதன் ஆகிய இருவரும் ஜெயஸ்ரீயை இருசக்கர வாகனத்தில் வாகரை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனா். அங்கு அவரை இருவரும் சோ்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அருகில் இருந்த முள்புதரில் வீசிவிட்டுச் சென்ாகத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.