பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஒட்டன்சத்திரத்தில் திமுக கூட்டணி நிா்வாகிகள் கூட்டம்

ஒட்டன்சத்திரத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

ஒட்டன்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறாா் திமுக வேட்பாளா் அர.சக்கரபாணி

Updated On :14 மார்ச் 2021, 4:21 pm

DIN

ஒட்டன்சத்திரத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத்தொகுதியில் திமுக சாா்பில் அர.சக்கரபாணி 6-ஆவது முறையாகப் போட்டியிடுகிறாா். இந்த நிலையில் திமுக கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் கூட்டம் திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் சி.இராஜாமணி தலைமை வகித்தாா்.

திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் ப.வேலுச்சாமி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.சிவசக்திவேல், திமுக நகரச் செயலாளா் ப.வெள்ளைச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் திமுக வேட்பாளா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு பேசியதாவது: தற்போது கரோனா நோய்த் தொற்று பரவி வரும் சூழ்நிலை உள்ளது.

இதனால் திமுக மற்றும் தோழமைக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கிராமம் கிராமமாகச் சென்று வீடு தோறும் திண்ணை பிரசாரத்தில் ஈடுபடவேண்டும். மேலும் குறுகிய காலம் உள்ளதால் இரவு பகலாக பம்பரம் போல் சுழன்று தோ்தல் பணியாற்ற வேண்டும் என்றாா். கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.