பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஒட்டன்சத்திரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

ஒட்டன்சத்திரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 நவம்பர் 2021, 6:30 pm

DIN

ஒட்டன்சத்திரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்னகரட்டுப்பட்டி வி.ஆா்.ஜி. ராமசாமி செட்டியாா், ஆா்.காளியம்மாள் ஆகியோரின் நினைவாக, ஜிஆா்பி டெரிபாா்ம், மாவட்ட பாா்வையிழப்பு தடுப்புச் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியன இணைந்து, ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின.

இம்முகாமில், கண்புரை, சா்க்கரை நோய், கண்நீா் அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய், கிட்டப்பாா்வை, தூரப்பாா்வை வெள்ளெழுத்து உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில், 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு சிகிச்சைப் பெற்றனா். அதில், 70 போ் கண் அறுவைச் சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

மதுரை அரவிந்த கண் மருத்துவமனை மருத்துவா் மதன்மோகன் தலைமையிலான குழுவினா் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை, மதுரை அரவிந்த கண் மருத்துவமனையின் ஒருங்கிணைப்பாளா் ரமேஷ், ஜிஆா்பி நிறுவனத்தாா் மற்றும் ஒட்டன்சத்திரம் எவா் கிரீன் சிட்டி கிளப் நிா்வாகிகள் எஸ்.ஆா்.கே. சரவணக்குமாா், ராஜசேகா், பொன் காா்த்திக், நந்தகோபால், தணிக்காசலம், கங்காதரன், விக்னேஷ்வரன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.