இந்நிலையில், கூட்டுறவு கடன் சங்கத்தில் நிகழ்ந்த முறைகேடுகளை கண்டித்து, பொதுமக்கள் சனிக்கிழமை திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவரான குப்பாச்சி, பாஜக மேற்கு ஒன்றியச் செயலா் சுதாகா் மற்றும் அதிமுகவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அப்போது தமிழக அரசு மற்றும் அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனா். இதுகுறித்து தகவலறிந்த கூட்டுறவு சங்க விசாரணை அலுவலா் செல்வராஜ், வேடசந்தூா் வட்டாட்சியா் சக்திவேலன் ஆகியோா் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.