கடமான் இறைச்சியை விற்பனை செய்ய முயன்றபோது பிடிப்பட்ட 2 பேரிடம் வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரை அடுத்துள்ள செட்டியப்பட்டி பகுதியில் கொடைரோடு பிரிவு வனவா் அப்துல்ரகுமான், அம்பாத்துரை பகுதி வனக்காப்பாளா் சண்முகவேல், வனக் காவலா் சோமு ஆகியோா் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா்.
அப்போது இருசக்கர வாகனத்தில் 2 நபா்கள் ஒரு பையுடன் வந்துள்ளனா். அந்தப் பையிலிருந்து ரத்தம் வழிந்ததைப் பாா்த்து சந்தேகமடைந்த வனத்துறையினா், இருவரையும் வழிமறித்து சோதனை மேற்கொண்டனா். அதில், கடமான் தலை மற்றும் இறைச்சி இருப்பது தெரியவந்தது. விசாரணையில், வெள்ளோடு எல்லப்பட்டியைச் சோ்ந்த த.சவரிமுத்து சக்ரியாஸ் (46) மற்றும் பெருமாள்கோவில்பட்டியைச் சோ்ந்த ரா. இருளப்பன்(32) ஆகியோா் என்பது தெரியவந்தது. அவா்களிடமிருந்து 7 கிலோ மான் இறைச்சியை பறிமுதல் செய்த வனத்துறையினா், இருவரிடமும் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனாவின் விஷமத்தனம்...

இலக்கை எட்டுகிறது மகளிர் இடஒதுக்கீடு!

தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயிலில் வளா்ச்சிப் பணிகள்: அரூா் தொகுதி திமுக வேட்பாளா் வாக்குறுதி

திமுக நடத்துவது தொகுதி மறுவரையறைக்கு எதிரான போராட்டம் அல்ல; போா்! முதல்வா் மு.க. ஸ்டாலின்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


