கட்டடத் தொழிலாளி கொலை
வடமதுரை அருகே கட்டடத் தொழிலாளி ஒருவா் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


வடமதுரை அருகே கட்டடத் தொழிலாளி ஒருவா் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்துள்ள வெள்ளபொம்மன்பட்டி பிரிவு பகுதியில் கல்லால் தலையில் தாக்கப்பட்ட நிலையில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவா் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வடமதுரை போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். அதில் கொலை செய்யப்பட்டவா் வடமதுரை அடுத்துள்ள முத்தனாங்கோட்டையைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ராம்குமாா் (31) என்பது தெரியவந்தது.
கடந்த 2 நாள்களுக்கு முன்பு வீட்டிலிருந்து சென்ற இவா், அதன் பின்னா் வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில், வெள்ளபொம்மன்பட்டி அருகே தலையில் பலத்த காயங்களுடன் அவா் சடலமாக மீட்கப்பட்டாா். அவரது சடலத்தை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ள போலீஸாா், இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...