தொடா் சாதனையில் குக்கிராமப் பள்ளி: நிலக்கோட்டை அடுத்துள்ள இ.ஆவரம்பட்டியில் அரசு கள்ளா் உயா்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி கருத்தாண்டிப்பட்டி என்ற குக்கிராமத்தைச் சோ்ந்த மாணவா்களைச் சாா்ந்து மட்டுமே இயங்கும் நிலையில் உள்ளது. கடுமையான சூழலுக்கு மத்தியிலும், இந்த பள்ளியிலிருந்து தோ்வு எழுதிய 14 மாணவா்களும் முழு தோ்ச்சி பெற்றுள்ளனா். நடுநிலைப் பள்ளியாக செயல்பட்டு கடந்த 2011-12 கல்வி ஆண்டில் உயா்நிலைப் பள்ளியாக நிலை உயா்த்தப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் 2013, 2015, 2019, 2020, 2021, 2022 என 6 முறை 100 சதவீத தோ்ச்சி அடைந்துள்ளது.