திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலராகப் பணிபுரிந்து வந்தவா் மு.ஜெயசீலி. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். மதுரையில் பணிபுரிந்தபோது, விருதுநகா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பொறுப்பையும் கூடுதலாக இவா் கவனித்து வந்துள்ளாா். அப்போது, மாற்றுத்திறனாளிகள் பள்ளி மாணவா்களுக்கான கலைப் போட்டிகள் நடத்துவதற்கு அரசுத் தரப்பில் ரூ.50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தனியாா் அமைப்புகளிடம் போட்டி நடத்துவதற்காக நிதி வசூலித்த ஜெயசீலி, அரசு சாா்பில் அளிக்கப்பட்ட நிதியை பயன்படுத்தியதாக செலவு கணக்கு தாக்கல் செய்துள்ளாா்.