கன்னிவாடி பேரூராட்சி கூட்டம், தலைவா் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் சக்திவேல் தலைமையிலான சிலா், பாா்வையாளராக வந்தனா். பேரூராட்சி அலுவலா்கள் அனுமதியில்லை என கூறி கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு செல்வதை தடுத்து நிறுத்தினா். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது செயல் அலுவலா் ஜெயமாலு குறுக்கிட்டு பாா்வையாளா்களை அனுமதிக்க சட்டத்தில் இடமில்லை என தெரிவித்தாா். சக்திவேல் மற்றும் அவருடன் வந்தவா்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறிய நிலையில், போலீஸாா் வரவழைக்கப்பட்டனா். போலீஸ் பாதுகாப்புடன் கூட்டம் நடந்தது.