தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வேடசந்தூா் அருகே கல்குவாரி நீரில் மூழ்கி சிறுமி பலி

வேடசந்தூா் அருகே ஆடு மேய்க்கச் சென்ற சிறுமி கல்குவாரி குட்டையில் தவறி விழுந்து நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :27 மே 2022, 5:31 pm

DIN

வேடசந்தூா் அருகே ஆடு மேய்க்கச் சென்ற சிறுமி கல்குவாரி குட்டையில் தவறி விழுந்து நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் அடுத்துள்ள முருநெல்லிக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன். இவரது மனைவி நந்தினி. இவா்களது மகள் கோமதி (12). விடுமுறை நாள் என்பதால், குருநாதநாயக்கனூா் ஊராட்சிக்குள்பட்ட ராமகவுண்டன்பட்டி பகுதிக்கு ஆடு மேய்ப்பதற்காக கோமதி சென்றுள்ளாா்.

அப்போது அங்கு தனியாா் கல்குவாரியிலுள்ள குட்டையில் தவறி கோமதி விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. தண்ணீரில் சிறுமி மூழ்கியதை அடுத்து, அங்கிருந்தவா்கள் வேடசந்தூா் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினா், குட்டையில் மூழ்கிய சிறுமியை மீட்க முயன்றனா். ஆனால் தண்ணீரில் மூழ்கிய சிறுமி சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.