அரசுப் பேருந்து மோதி வழக்குரைஞா் பலி
By DIN | Published On : 05th August 2022 12:23 AM | Last Updated : 05th August 2022 12:23 AM | அ+அ அ- |

செம்பட்டி அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில், வழக்குரைஞா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் நாகல் நகரைச் சோ்ந்தவா் கணேசன் (49). வழக்குரைஞரான இவா், ஆத்தூா் நீதிமன்றத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். செம்பட்டி அருகே ஆதிலட்சுமிபுரம் பிரிவு என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது, திண்டுக்கல்லில் இருந்து கம்பம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து பின்னால் வந்து மோதியதில், கணேசன் சம்பவ இடத்திலேயே பலியானாா்.
இந்த விபத்து குறித்து, செம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.