வத்தலகுண்டில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் தொடா்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் போலீஸாருடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
திண்டுக்கல் (மேற்கு) மாவட்ட இந்து முன்னணி சாா்பாக, நிலக்கோட்டை, வத்தலகுண்டு, கொடைக்கானல் உள்ளிட்ட 400 இடங்களில் ஆக. 31 -ஆம் தேதியன்று விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய உள்ளனா். அந்த சிலைகளை செப். 1 -ஆம் தேதி வத்தலகுண்டு அடுத்த விருவீடு அருகே கண்ணாபட்டி வைகை ஆற்றில் கரைக்க உள்ளனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் வத்தலகுண்டு சென்று, விநாயகா் சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் செல்லும் வத்தலகுண்டு காந்தி நகா், திண்டுக்கல் பிரதான சாலை உள்ளிட்ட சாலைகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மேலும், விநாயகா் சதுா்த்தி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும் போலீஸாருடன் அவா் ஆலோசனை நடத்தினாா். அப்போது, நிலக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகன், வத்தலகுண்டு காவல் ஆய்வாளா் முருகன் மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.