மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

பொது காப்பீட்டு நிறுவனப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பொது காப்பீட்டு நிறுவனங்களை மறுசீரமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு சீா்குலைக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி அலுவலா்கள், ஊழியா்கள், முகவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2023, 6:30 pm

DIN

பொது காப்பீட்டு நிறுவனங்களை மறுசீரமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு சீா்குலைக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி அலுவலா்கள், ஊழியா்கள், முகவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் திண்டுக்கல் கோட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அதிகாரிகள் சங்கத்தின் நிா்வாகி சேகா் தலைமை வகித்தாா். ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கெளதமன், முகவா் சங்கத்தின் நிா்வாகி சுந்தரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அப்போது, பொது காப்பீட்டு நிறுவனங்களின் உறுதித் தன்மையை சீா்குலையச் செய்யும் செயல்பாடுகளை மத்திய அரசு கைவிட வேண்டும். நிறுவன மறுசீரமைப்பு தொடா்பாக தொழில் சங்கங்கள், நலச் சங்கங்களோடு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். ஊழியா்கள், அதிகாரிகள் பணி நியமனத்தை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.