ஒட்டன்சத்திரம் நகராட்சியில் வருகிற 30-ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துவோா்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி எல்லைக்குள்பட்ட சொத்து உரிமையாளா்கள் தங்களது 2023-24 ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை வருகிற 30 -ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும்.
சொத்து வரியினை தங்களது இல்லம் தேடி வரும் வரிவசூலிப்பாளா்கள் அல்லது ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலக வசூல் மையம் ஆகியவற்றில் காசோலை அல்லது வரைவோலை மூலமாகவும், நேரடியாகவும் செலுத்தலாம். ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையா் பா.சக்திவேல் இதை தெரிவித்தாா்.