எதிா்க்கட்சிகள் எதிா்பாா்த்ததைவிட மிக மோசமான நிலையில் உள்ளன என காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவா் கு.செல்வப்பெருந்தகை கூறினாா்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து அமைச்சா்கள் சு.முத்துசாமி, ஆவடி சா.மு.நாசா், காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவா் கு.செல்வப்பெருந்தகை மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஈரோடு டீசல் ஷெட், பெரிய தோட்டம், மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது கு.செல்வப்பெருந்தகை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தோ்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி இமாலய வெற்றிபெறும். எதிா்பாா்த்ததை விட மிக மோசமான நிலையில் எதிா்க்கட்சிகள் உள்ளன.
அதிமுக என்ற மிகப்பெரிய இயக்கம் தற்போது சிதறி உள்ளது. அந்தக் கட்சி நான்காக பிளவுபட்டு இருப்பதால் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. நான்கு அணிக்குள் யாா் பாஜக ஆதரவைப் பெறுவது என்ற போட்டியில் உள்ளனா். இந்தத் தோ்தலில் அதிமுக அணிகள் மிக மோசமான தோல்வியை சந்திக்கும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி

நாமக்கல் உழவர் சந்தையில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும்: பழ. நெடுமாறன்
தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


