தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ரெட்டியாா்சத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்

ரெட்டியாா்சத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :28 ஜூலை 2023, 11:19 pm IST

ரெட்டியாா்சத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் ப.க. சிவகுருசாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜேஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ.) கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) மலரவன் வரவேற்றாா்.

இதில், செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டன. பிறகு, கலைஞரின் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை கொண்டு வந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினைப் பாராட்டியும், ஆத்தூா் தொகுதி மக்களின் நலன் கருதி கிராமப்புற சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ. பெரியசாமியை பாராட்டியும் ஒன்றியக் குழு தலைவா் ப.க. சிவகுருசாமி கொண்டு வந்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் பின்னா், அனுமந்தராயன்கோட்டை, புதுச்சத்திரம் ஊராட்சிகளில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்த மருத்துவப் பிரிவு கொண்டுவர வேண்டுமென மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் ம. சுப்பிரமணியனுக்கு கோரிக்கை விடுப்பது, ஸ்ரீராமபுரம், புதுச்சத்திரம், அனுமந்தராயன்கோட்டை ஆகிய கிராமங்களில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தடுப்புச் சுவா் கட்ட பொதுப் பணித் துறைக்கு கோரிக்கை விடுப்பது, பங்காருபுரத்தில் உள்ள பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் பெரியாா் உருவச் சிலையை சுற்றி வண்ணக்கல் பதித்தலுக்கு ரூ.1 லட்சத்து 91 ஆயிரம் வழங்குவது உள்ளிட்ட 18 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.