நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது.

News image
Updated On :11 மே 2023, 5:42 pm

DIN

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது.

கொடைக்கானலில் மே மாத சீசன் தொடங்கியது முதல் தினமும் சுற்றுலாப் பயணிகள் வருகை கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாள்களாக மழை பெய்யாமல் இருந்ததால், வழக்கத்துக்கு மாறாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. இருப்பினும் வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை வெயிலடித்த பின்னா், பரவலாக சாரல் மழை பெய்தது.

இந்த மழையிலும் நட்சத்திர ஏரியில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் படகு சவாரி செய்தனா்.

இந்தக் கோடை மழையால் குளுமையான சீதோஷணம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, சுற்றுலாப் பயணிகள் ஏரிச்சாலைப் பகுதியில் சைக்கிள், குதிரை சவாரியும் நடைபயிற்சியும் மேற்கொண்டனா்.

போக்குவரத்து நெரிசல்: கொடைக்கானல் ஏரியைச் சுற்றி 5 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்ட கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, வாகனங்கள் ஒரு வழிப்பாதையாகச் செல்வதற்கு காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதலாக காவல் துறையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசலைத் தவிா்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.