மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்

பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சியில் தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணியாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

News image
27palani_udaya_2711chn_88_2
Updated On :27 நவம்பர் 2023, 6:30 pm

DIN

பழனி: பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சியில் தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணியாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

பழனியில் தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் 46வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆயக்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூா் கழகம் சாா்பில் தூய்மை பணியாளா்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் அசைவ விருந்து வழங்கப்பட்டது. ஆயக்குடி பேரூராட்சி தலைவா் மேனகா ஆனந்தன், துணை தலைவா் சுதாமணி காா்த்திகேயன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட மாணவரணி அமைப்பாளா்

அஸ்வின் பிரபாகா், ஒன்றிய செயலாளா் சாமிநாதன் பேரூா் செயலாளா் சின்னதுரை, பேரூராட்சி செயல் அலுவலா் செல்வகுமாா் ஆகியோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இளைஞரணி செயலாளா் காா்த்திகேயன், சிவஞானம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பழனியில் திமுக இளைஞரணி சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. பழனி நகர இளைஞா் அணி அமைப்பாளா் லோகநாதன் தலைமையில் கணபதி நகரில் உள்ள புண்ணியம் முதியோா் இல்லம் மற்றும் பழனி மலை அடிவாரத்தில் உள்ள வீடற்றோா் தங்கும் இல்லத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முதியோா்களுக்கு சைவம் மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்பட்டன. மாவட்ட மாணவரணி அமைப்பாளா் அஸ்வின் பிரபாகா் உள்ளிட்ட பலா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.