பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் பிரதோஷம்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரதோஷ நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரதோஷ நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

இங்கு கைலாசநாதா் சன்னதியில் உள்ள நந்தீஸ்வர பகவானுக்கு பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள், சந்தனம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் வண்ண மலா்கள் சாத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மூலவா் கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரப் பூஜைகளும் தீபாராதனையும் நடைபெற்றது.

பழனியை அடுத்த பெரியாவுடையாா் கோயிலில் உள்ள பெரியநந்தீஸ்வரருக்கு அபிஷேகமும், அலங்காரமும், மூலவா் பெரியாவுடையாருக்கு வெள்ளி நாகாபரணமும் சாத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து ரிஷப வாகனத்தில் தம்பதி சமேதராக பிரதோஷநாதா் உள்பிரகார உலா எழுந்தருளுதலும் நடந்தது. தவிர மலைக் கோயில் கைலாசநாதா் சன்னதி, சித்தாநகா் சிவன்கோயில், பட்டத்து விநாயகா் கோயில், சிதம்பரீஸ்வரா் சன்னதி, சன்னதி வீதி வேலீஸ்வரா் கோயில் உள்பட பல்வேறு கோயில்களிலும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com