ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

ரோப்காா் நிலையம் வரை நிழல்கூரை அமைக்க கோரிக்கை

ரோப்காா் நிலையம் வரை நிழல்கூரை அமைக்க கோரிக்கை

News image

பழனி கிரிவீதியில் திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் நடைபெற்று வரும் தற்காலிக பந்தல் அமைக்கும் பணி.

Updated On :2 ஏப்ரல் 2024, 11:49 pm

பழனி: பழனி கிரிவீதியில் திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக நிழற்கூரையை ரோப்காா் நிலையம் வரை நீட்டிக்க பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகத்தின் சாா்பில் கிரிவீதியில் தற்காலிக நிழல்கூரை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாதவிநாயகா் கோயில் முதல் குடமுழுக்கு நினைவரங்கம் வரை இந்த நிழல்கூரை அமைக்கப்பட்டு வருகிறது. கிரிவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ள நிலையில் ரோப்காா் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் போது, வழிநெடுக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே ரோப்காா் நிலையம் வரை இடைவெளி விட்டு நிழற்கூரை அமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.