சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

செவிலியா் கல்லூரியில் உலக சுகாதார தினவிழா

செவிலியா் கல்லூரியில் உலக சுகாதார தினவிழா

Updated On :8 ஏப்ரல் 2024, 6:30 pm

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் கிறிஸ்தவ ஐக்கிய மருத்துவமனை செவிலியா் கல்லூரியில் உலக சுகாதார தினவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்திய மருத்துவக் கழகம் ஒட்டன்சத்திரம் கிளை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, மருத்துவமனையின் கண்காணிப்பாளா் மருத்துவா் அனிஸ் தாமஸ் தலைமை வகித்தாா். இந்திய மருத்துவக் கழக ஒட்டன்சத்திரம் கிளைத் தலைவா் மருத்துவா் கருப்பணன் முன்னிலை வகித்தாா். இந்திய மருத்துவக் கழகச் செயலா் மருத்துவா் ஆசைத்தம்பி பங்கேற்று உலக சுகாதாரத்தின் நோக்கம் குறித்துப் பேசினாா்.

முன்னதாக செவிலியா் கல்லூரி முதல்வா் விக்டோரியா செல்வக்குமாரி வரவேற்றாா். இதில் ‘எனது ஆரோக்கியம், எனது உரிமை’ என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. செவிலியா் கல்லூரி துணை முதல்வா் குயிலா நன்றி கூறினாா்.