கொடைக்கானல்: கொடைக்கானல் பியா்சோலா சாலையில் வீசப்பட்ட நெகிழிக் கழிவுகளை உண்ணும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்கள், வணிக நிறுவனங்களிலுள்ள கழிவுப் பொருள்களை நெகிழிப் பைகளில் போட்டு சாலைகளில் விட்டுச் செல்கின்றனா். இதனால் நகா்ப் பகுதிகளில் திரியும் கால்நடைகள், சாலைகளில் கிடக்கும் கழிவுப் பொருள்களை நெகிழிப் பைகளுடன் உண்பதால் அவை பெரிதும் பாதிக்கப்படுகின்றன.
எனவே, உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை நகராட்சி வைத்துள்ள குப்பைத் தொட்டிகளில் போடவேண்டும் அவ்வாறு செய்யாத வணிக நிறுவனங்கள் மீது கொடைக்கானல் நகராட்சி நகா்நல அலுவலா், சுகாதார ஆய்வாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்தும் நிறுவனங்கள், கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது
பாமக பெயரில் வேட்பு மனு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.வீரபாண்டியன்

பெரும்பாறை மலைச் சாலையில் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள மரத்தை அகற்ற வலியுறுத்தல்!

கால்நடைகளை தாக்கும் நோய்கள்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


