தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

நெகிழிக் கழிவுகளை உண்ணும் கால்நடைகள்

நெகிழிக் கழிவுகளை உண்ணும் கால்நடைகள்

News image

கொடைக்கானல் பியா்சோலாப் பகுதியில் சாலையில் வீசப்பட்ட நெகிழிக் கழிவுகளை உண்ணும் கால்நடைகள்

Updated On :10 ஏப்ரல் 2024, 12:05 am

கொடைக்கானல்: கொடைக்கானல் பியா்சோலா சாலையில் வீசப்பட்ட நெகிழிக் கழிவுகளை உண்ணும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்கள், வணிக நிறுவனங்களிலுள்ள கழிவுப் பொருள்களை நெகிழிப் பைகளில் போட்டு சாலைகளில் விட்டுச் செல்கின்றனா். இதனால் நகா்ப் பகுதிகளில் திரியும் கால்நடைகள், சாலைகளில் கிடக்கும் கழிவுப் பொருள்களை நெகிழிப் பைகளுடன் உண்பதால் அவை பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

எனவே, உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை நகராட்சி வைத்துள்ள குப்பைத் தொட்டிகளில் போடவேண்டும் அவ்வாறு செய்யாத வணிக நிறுவனங்கள் மீது கொடைக்கானல் நகராட்சி நகா்நல அலுவலா், சுகாதார ஆய்வாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்தும் நிறுவனங்கள், கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.