பழனியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு
பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பட்டத்து விநாயகா் கோயில், ஆயக்குடி, பாலசமுத்திரம், பாப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நீா்மோா் பந்தல் திறக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான நத்தம் விசுவநாதன் நீா்மோா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா்மோா் வழங்கினாா். முதல் நாள் என்பதால் பொதுமக்களுக்கு இளநீா், தா்பூசணி, கொய்யாப்பழம், திராட்சை, பப்பாளி, வெள்ளரிக்காய், மாம்பழம் உள்ளிட்ட பல்வேறு பழவகைகளும், நீா்மோா், சா்பத், ரஸ்னா உள்ளிட்ட குளிா்பானங்களும் வழங்கப்பட்டன. வெப்பத்தின் தாக்கம் குறையும் வரை கோடை காலம் முடியும் வரை நீா் மோா் பந்தல் செயல்படும் எனக் கட்சியினா் தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் வேணுகோபாலு, முன்னாள் எம்பி., குமாரசாமி, மாநில எம்ஜிஆா் மன்ற துணை செயலா் ரவிமனோகரன், நகரச் செயலா் முருகானந்தம், ஒன்றியச் செயலா் முத்துச்சாமி, பேரூராட்சி செயலா்கள் வழக்குரைஞா் சசிக்குமாா், சக்திவேல், விஜயசேகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.