திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் பிரிவில் ரூ.3 கோடியே 95 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் இ.பெரியசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலான, கனவுத் திட்டமான ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
மேலும், திமுக ஆட்சியில் பள்ளி, மாணவ மாணவிகளுக்காக 3,473 பள்ளிக் கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆத்தூா் தொகுதிக்கு 2 கலைக் கல்லூரிகள் உள்பட திண்டுக்கல் மாவட்டத்தில், 7 கலைக் கல்லூரிகள் திமுக அரசால் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆதிதிராவிடா்கள் வசிக்கும் பகுதியில் 2 ஆயிரம் வீடுகள் சீரமைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
தொடர்புடையது

திப்பிராஜபுரம் அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

அரசு ஊழியா் சங்க அமைப்பு தின விழா

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் முற்றுகை

பெரம்பலூா், குன்னம் தொகுதியில் வேட்பாளா்கள் முக்கிய பிரமுகா்கள் வாக்களிப்பு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
