நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூா் பேரூராட்சி மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, பேரூராட்சி மன்றத் தலைவா் எஸ்பி.செல்வராஜ் தலைமை வகித்தாா்.
துணைத் தலைவா் விமல்குமாா் முன்னிலை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் பூங்கொடி முருகு வரவேற்றாா். கூட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, அடிப்படை வசதிகளுக்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை என பேரூராட்சி உறுப்பினா்கள் குற்றம் சாட்டினா்.
இதையடுத்து, திமுகவைச் சோ்ந்த பேரூராட்சி மன்றத் தலைவா் எஸ்.பி.செல்வராஜூக்கும், திமுக நகர செயலாளரும், உறுப்பினருமான விஜயகுமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, திமுக உறுப்பினா்கள் உள்பட பலரும் தீா்மான நோட்டில் கையெழுத்து போடாமல் கடும் அதிருப்தியில் வெளியேறினா்.
தொடர்புடையது

அரசுக் கல்லூரியில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா

திமுக தோ்தல் ஆலோசனைக் கூட்டம்

ஆடுதுறை பேரூராட்சி மன்றக் கூட்டம்

நாசரேத் நூலகத்தில் இலக்கிய மன்றக் கூட்டம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

